Category Archives: Latest Updates
சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 15.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.பயிற்சியை நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பத்து வைத்தார். இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கு நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.
வெறுக்கத்தக்க பேச்சுக்களை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை பாவித்தல் தொடர்பான செயலமர்வு
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் #SOND நிறுவனத்தினால் வெறுக்கத்தக்க பேச்சுக்களை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை பாவித்தல் தொடர்பான செயலமர்வு கடந்த சனிக்கிழமை Greengrass hotel இல் நடைபெற்றதை படங்களில் காணலாம்…
தன்னார்வ பயிற்றுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி- யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தின் அரச அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் 09.06.2022 இன்று திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகங்களின் முக்கிய அதிகாரிகளும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி. சுரேந்திரகுமார் அவர்களும் மற்றும் சிரேஸ்ட சமூகவியலாளர் பாலகுமாரி அவர்களும் கலந்து கொண்டனர்.
நிரந்தர வளவாளர்களுக்கான பயிற்சி
கருத்தரங்கு
சிறுவர்களுக்கான இன மத ஒற்றுமைக்கான சித்திர போட்டி
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினர் இணைந்து நடைமுறைப்படுத்தும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தின் கீழ் யாழ்மாவட்ட சர்வமத சமாதான செயற்குழுவும் சகவாழ்வுக்குழுவும் ஒருங்கிணைந்து சிறுவர்களுக்கான இன மத ஒற்றுமைக்கான சித்திர போட்டியினை நாவற்குழி கிராமத்தில் நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டதை படங்களில் காணலாம்….
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு
UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுுனத்தால் நடைமுறைப்படுத்தி வரும் மாற்றத்திற்கான பாதை திட்ட தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு 19.04.2022 அன்று SOND நிறுவனத்தில் நடைபெற்றது
முரண்பாட்டுத் தீர்வும், மத்தியஸ்தமும் தொடர்பான செயலமர்வு
சர்வதேச சமாதான செயற்குழுவின் யாழ் மாவட்ட உப குழுக்களின் உறுப்பினர்களுக்கான முரண்பாட்டுத் தீர்வும், மத்தியஸ்தமும் தொடர்பான செயலமர்வு வவுனியா ஓவிய ஹொட்டலில் நடைபெற்றது. இதன்போது SOND நிறுவனத்தின் PACT திட்டத்தின் கள இணைப்பாளர் கெளரிரூபன் அவர்களும் நாவற்குழி, நாவாந்துறை பிரதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்