Category Archives: Latest Updates

சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி

 

286181574_4893072657481828_5902391777976285566_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 15.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.பயிற்சியை நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பத்து வைத்தார். இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.

 

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி

 

285877980_4893064147482679_6260522162789991409_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கு நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.

 

 

வெறுக்கத்தக்க பேச்சுக்களை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை பாவித்தல் தொடர்பான செயலமர்வு

 

285525444_4884281798360914_5942336397234843158_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் #SOND நிறுவனத்தினால் வெறுக்கத்தக்க பேச்சுக்களை தடுப்பதற்காக சமூக ஊடகங்களை பாவித்தல் தொடர்பான செயலமர்வு கடந்த சனிக்கிழமை Greengrass hotel இல் நடைபெற்றதை படங்களில் காணலாம்…

 

 

தன்னார்வ பயிற்றுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

 

285288236_4880109288778165_1906090005671600119_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் இன்று சனிக்கிழமை 11.06.2022 அன்று திருமறைக்கலாமன்ற கலா முற்ற மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்ட தன்னார்வ பயிற்றுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக உதவி அரசாங்க அதிபர் திருமதி கமலராஜன் மற்றும் வட மாகாண பணிப்பாளர்- முன்பிள்ளை பருவ அபிவிருத்தி திரு.சு.சற்குணராஜா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றிய அனைத்து தன்னார்வலர்களை கெளரவிப்பதில் SOND நிறுவனமானது பெருமை கொள்கிறது.

 

 

கலந்துரையாடல்

 

284845053_4876275765828184_3807051182889301662_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி- யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தின் அரச அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் 09.06.2022 இன்று திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகங்களின் முக்கிய அதிகாரிகளும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்திய கலாநிதி. சுரேந்திரகுமார் அவர்களும் மற்றும் சிரேஸ்ட சமூகவியலாளர் பாலகுமாரி அவர்களும் கலந்து கொண்டனர்.

 

நிரந்தர வளவாளர்களுக்கான பயிற்சி

 

286085537_4865234233599004_383406639697728701_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை 04.06.2022 அன்று திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்ட நிரந்தர வளவாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
இப் பயிற்சியில் வளவாளர்களாக S.Senthurajah, Rev.fr.I.S.Vijendran, Dr.S.Sivathas, Mrs.T.Niruba ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கருத்தரங்கு

 

280951563_4815133275275767_8152650745218162352_n

சமகால நாட்டு நிலை தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பு தொடர்பாக மக்கள் அபிப்பிராயத்தினை பிரதிபலித்து நாட்டில் புதியதொரு ஆட்சி மலர்வதற்கு நிர்வாகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சட்ட துறைகளில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பான கருத்தரங்கு #SOND நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு யாழ் திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் நேற்று 19.05.2022 வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை #SOND நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் மோகனதாஸ், ஊடகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் Dr.ரகுராம், சட்டத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் Ms.கோசலை மதன், முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் திரு. செல்வின் ஆகியோர் சமகால நிலைமை தொடர்பான விளக்கங்களை அளித்திருந்தனர்.

 

 

சிறுவர்களுக்கான இன மத ஒற்றுமைக்கான சித்திர போட்டி

 

280712047_4803775369744891_7687481830756490186_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினர் இணைந்து நடைமுறைப்படுத்தும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தின் கீழ் யாழ்மாவட்ட சர்வமத சமாதான செயற்குழுவும் சகவாழ்வுக்குழுவும் ஒருங்கிணைந்து சிறுவர்களுக்கான இன மத ஒற்றுமைக்கான சித்திர போட்டியினை நாவற்குழி கிராமத்தில் நடாத்தி பரிசில்கள் வழங்கப்பட்டதை படங்களில் காணலாம்….

 

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு

 

278939614_4746729302116165_3634228778539345801_n

UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுுனத்தால் நடைமுறைப்படுத்தி வரும் மாற்றத்திற்கான பாதை திட்ட தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு 19.04.2022 அன்று SOND நிறுவனத்தில் நடைபெற்றது

 

 

முரண்பாட்டுத் தீர்வும், மத்தியஸ்தமும் தொடர்பான செயலமர்வு

 

277728383_4692277404228022_4512735307627769649_n

சர்வதேச சமாதான செயற்குழுவின் யாழ் மாவட்ட உப குழுக்களின் உறுப்பினர்களுக்கான முரண்பாட்டுத் தீர்வும், மத்தியஸ்தமும் தொடர்பான செயலமர்வு வவுனியா ஓவிய ஹொட்டலில் நடைபெற்றது. இதன்போது SOND நிறுவனத்தின் PACT திட்டத்தின் கள இணைப்பாளர் கெளரிரூபன் அவர்களும் நாவற்குழி, நாவாந்துறை பிரதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்