காலநிலை மாற்ற செயற் குழுவினுடைய 5வது அமர்வு
சொண்ட் அமைப்பினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வரும் காலநிலை மாற்ற செயற் குழுவினுடைய 5வது அமர்வானது செப்டம்பர் 29 காலை 10 மணிக்கு இவ் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச. செந்தூராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதில் பல்வேறு அரசதிணைக்களங்களிலிருந்தும், அரசசார்பற்ற நிறுவனங்களிலிருந்தும் கமநல அமைப்புக்களிலிருந்தும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.