இளையோர் திருவிழா

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் யுவதிகளினதும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளினதும் கலாசார திருவிழா 11.10.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடி வீதியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் பல்வகை கலாச்சார நிகழ்ச்சிகளும் இளைஞர் யுவதிகளினது ஆக்கத்திறன் வெளிப்பாடும் இடம்பெறும். மொழிகள் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சமாதான சகவாழ்வு என்ற கருப்பொருளிலான சித்திரப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறும்.