இயற்கை விவசாயப் பண்ணை

இப்படி ஒரு பண்ணை கடந்த வருடம் நீர்வேலியில் 4 பரப்புக் காணியில் SOND  நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.  இப்பண்ணையில் வாழை, வாழைக்கிடையே கிளிசரியா வேலிகள் ஊடுபயிராகப் போடப்பட்டது.  அத்தோடு பப்பாசி, அன்னாசி, மரக்கறிப்பயிர்வகைகள், அபூர்வமான மூலிகைகள் என்பன நாட்டப்பட்டன. மலைநாட்டில் விளையும் சலாது போன்ற மரக்கறி வகைகளும் நாட்டப்பட்டன. இப்பண்ணையில் மிகக்குறைந்தளவு நீர் பயன்படுத்தப்பட்டது. அயலில் இருக்கின்ற வாழைத்தோட்டங்களிற்கு பாய்ச்சுகின்ற நீரின் கால்ப்பங்கு நீரே இப்பண்ணையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பண்ணை மிகவும் செழிப்பாகக் காணப்பட்டது.  இப்பண்ணையைப் பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள், ஆர்வலர்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். இப்பண்ணை கடந்த வருடம் வடமாகாண விவசாய அமைச்சர் திரு.ஐங்கரநேசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லப்பைப் பண்ணை

தற்போது புதிய பண்ணையொன்று பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல்லப்பை என்ற இடத்தில் வல்லிபுரக் கோவிலுக்கு மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை சுமார் 10 ஏக்கர் நிலத்தைக் கொண்டது.

இதில் 6 ஏக்கர் நிலம் நெற்காணியும் 4 ஏக்கர் நிலம் மேட்டுக்காணியும் உள்ளது. இங்கு 20 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயமுறையைப்பற்றி விவசாயச்செய்கை ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.