யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக, வாழைச் செய்கை விவசாயிகளுக்கு சேதனச் சான்றிதழ் வழங்கும் வைபவம்

1 FOC 1 copy
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக, வாழைச் செய்கையினை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்டவிவசாயிகளுக்கு சேதனச் சான்றிதழ் வழங்கும் வைபவம் இராமு வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (1.2.2015) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ. ஐங்கரநேசன் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை அவைத் தலைவர் திரு. C.V.K. சிவஞானம் மற்றும் பேராசிரியர் றிச்சாட் (Prof.Richard ) அவர்களும் பங்குபற்றி இருந்தனர்.

அத்துடன் எமது SOND அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, மற்றும் ஆலோசகர் அஜந்தாயினி, இவர்களுடன் சான்றிதழ் வழங்கும் Sricert நிறுவனத்தின் உரிமையாளர் திரு.திலக் மற்றும் சேதன விவசாய ஆர்வலர்கள், மற்றும் விவசாயிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமையை படங்களில் காண்க.

FOC 8 FOC 2 FOC 5Untitled-1 copy
FOC 1 FOC 4 FOC 6FOC 10