கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – அந்தோனியார்புரம்

 

somnnsa 12 10 15 2

அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 12.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் அந்தோனியார்புர கிராமத்தின் RDS பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவுச்சங்கம், விவசாய அமைப்பு, இளைஞர்கழகம், கிராமிய அமைப்பு போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 18 பேரும் கிராம உத்தியோகத்தர்,

 

somnnsa 12 10 15 1

அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும்
SOND நிறுவன பணிப்பாளரும் SOND நிறுவன பணியாளர்களும் YGRO நிறுவன பணியாளர் ZOA நிறுவன பணியாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலானது SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசாவின் தலைமையில் நடைபெற்றது.