சாவகச்சேரி பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான பயிற்சிநெறி – இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டம்
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நெறியானது அண்மையில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியில் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


