சர்வதேச சமாதான தின நிகழ்வு – 2019

 

2

இலங்கை தேசிய சமாதானப் பேரவையால் முன்னெடுக்கப்படும் SCORE திட்டமானது வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவில் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக சர்வதேச சமாதான தினமும், மாவட்டங்களுக்கிடையிலான பரிமாற்ற வேலைத்திட்ட நிகழ்வும் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 

 

இந்நிகழ்வை சிறப்பிக்க சேருவில பிரதேச சமூக இணைப்பாளர்களும், அரச, அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் (தமிழ், சிங்கள சகோதரர்கள்) யாழ் மண்ணிற்கு வருகை தந்திருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில் வலி வடக்கு பிரதேச செயலர் திரு.ச.சிவஸ்ரீ, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமார், SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, SOND நிறுவன பணியாளர்களும், SCORE திட்ட உத்தியோகத்தர் திரு.G.வொட்கின்சன், திருமதி.A.சௌமியா, அகவொளி நிறுவன இயக்குனர் அருட்பணி.ஸ்ரலின், யாழ் மாவட்ட சமூக இணைப்பாளர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

3

1