தன்னார்வ பயிற்றுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

 

285288236_4880109288778165_1906090005671600119_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் இன்று சனிக்கிழமை 11.06.2022 அன்று திருமறைக்கலாமன்ற கலா முற்ற மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்ட தன்னார்வ பயிற்றுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக உதவி அரசாங்க அதிபர் திருமதி கமலராஜன் மற்றும் வட மாகாண பணிப்பாளர்- முன்பிள்ளை பருவ அபிவிருத்தி திரு.சு.சற்குணராஜா மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றிய அனைத்து தன்னார்வலர்களை கெளரவிப்பதில் SOND நிறுவனமானது பெருமை கொள்கிறது.