சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி

 

286181574_4893072657481828_5902391777976285566_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 15.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.பயிற்சியை நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பத்து வைத்தார். இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.