மாற்றத்திற்கான பாதை திட்டத்தை நெறிப்படுத்தியோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு

 

289683425_4907023222753438_3780732504691527625_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் சனிக்கிழமை 18.06.2022 பொது நூலக மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்டத்தை நெறிப்படுத்தியோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் திரு.சி.ஸ்ரீசற்குணராஜா அவர்களும் மற்றும் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் திரு.மோகனதாஸ் அவர்களும் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் திரு. R.குருபரன் அவர்களும் மற்றும் மேலதிக கல்விப்பணிப்பாளர் வடமாகாணம் திரு.J.குயின்ரஸ் அவர்களும் மற்றும் UNICEF நிறுவனத்தின் Child Survival and Development Officer திருமதி. S.ராதிகா அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தை நெறிப்படுத்தியோர் அனைவரையும் கெளரவிப்பதில் SOND நிறுவனமானது பெருமை கொள்கிறது.