மாதாந்த ஆய்வரங்கு -அதிகரித்துவரும் வீதி விபத்துக்களும், வீதிப்போக்குவரத்துச் சட்டங்களும்.

1 copy
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் இயங்கிவரும் சொண்ட் நிறுவனமானது சமூகப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனோடு தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களினுடைய ஒத்துழைப்புடன் அதற்குரிய விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு வழங்கிவருகின்றது. அந்தவகையில்; ‘அதிகரித்துவரும் வீதி விபத்துக்களும், வீதிப்போக்குவரத்துச் சட்டங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வரங்கானது நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் 06/09/2014 (சனிக் கிழமை), காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.  
 

2 copy
அக்கரைப்பற்று பொஸிஸ் நிலயத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எ.என்.எம். நஜீப் அவர்கள் ஆய்வரங்கில் பங்குபற்றிய நாற்பதிற்கும் மேற்பட்ட ஆர்வலர்களுக்கு வீதி விபத்துக்கள், போக்குவரத்துச் சட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன் கேள்விநேரத்தின் போது ஆர்வலர்களினால் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கும் பதிலுரைத்தார். அக்கரைப்பற்று சொண்ட் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் த. விஜயகுமார் அவர்கள் இவ்வாய்வரங்கினை ஒருங்கிணைப்புச் செய்தார்.