மாணவி பாடசாலையில் மீள் இணைப்பு

பெயர் :- செல்வி. கிருசா. இராசா
இடம் :- பாண்ட வேட்டை, சுழிபுரம்.
பிறந்த திகதி:- 20.06.2000
வயது :- 14

சுழிபுரம் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்புலம் கிராமத்தில் உள்ள முன்பள்ளியில் மாணவர்களுக்கு எமது MRE பணியாளர்கள் மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு வழங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இச் சிறுமி இனங்காணப்பட்டார். அதாவது முன்பள்ளி மாணவர்களுக்கு வழிப்புணர்வு வழங்கிக்கொண்டிருந்த வேளையில் இவர் வெளியில் நின்று கொண்டு மாணவர்களுடைய பாட்டாக்களை ஒழுங்காக அடுக்கி வைத்ததோடு அவர்களுக்கு உணவு வழங்கும் பாத்திரங்களை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்தி வைத்ததார். சிறுமியின் இச் செயற்பாட்டை அவதானித்த எமது பணியாளர்கள் அவரை அழைத்து போதே வாய்பேச முடியாதவர் என்பதனை தெரிந்துகொண்டனர். பின்னர் அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருந்தனர்.இவருடைய தாயார் இறந்துவிட்டார். இவரது கல்வி செயற்பாடுகள் தொடர்பாக தந்தை, சகோதரர்கள், மற்றும் சிறிய தாயார், சிறிய தந்தையுடன் கலந்துரையாடி, பின்னர் கைதடி நவீல்ட் பாடசாலை அதிபருடைய அனுமதியினைப் பெற்று எமது பணியாளர்களால் 28.01.2014 அன்று பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளார்.
இச்சிறுமியின் குடும்பம் வறுமை நிலையில் உள்ளதன் காரணமாக சிறுமி கைதடி நவீல்ட் பாடசாலையில் தங்கியிருந்து கல்விச் செயற்பாட்டை தொடர தேவையான பொருட்கள் எமது SOND நிறுவனத்தினாலும் பணியாளர்களினாலும் வழங்கப்பட்டுள்ளது.