முதலுதவி பயிற்சி நெறி எமது யாழ் SOND அலுவலகத்தில்

06.01.2014 , 07.01.2014 ஆகிய இரு தினங்களும்  எமது யாழ் SOND நிறுவன பணியாளர்கள் மற்றும் மிதிவெடி அபாயக்கல்வி வழிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட கிராமமட்ட தொண்டர்களுக்கான முதலுதவி பயிற்சி நெறி எமது அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாக 20.03.2014 அன்று மேலும் ஒரு நாள் முதலுதவி பயிற்சி  நெறியானது எமது அலுவலகத்தில் நடைபெற்றது. இவ் பயிற்சி  நெறியானது  இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ்மாவட்டத்திற்கு பொறுப்பான முதலுதவி பயிற்சியாளர். திரு.இலங்கேஸ்வரன் அவர்களால் நடாத்தப்பட்டது. அத்துடன் இது தொடர்பான பரீட்சையும்  22.03.2014 சனிக்கிழமை பணியாளர்களுக்கு நடாத்தப்பட்டது.