சமூகத்திற்கு பயன்படும் விவசாய முறையே சிறப்பானது.
இயற்கை வளங்களை பாதுகாக்கக்கூடிய விவசாய முறை எமக்கு உகந்தது. மண்ணை, நீரை வளியை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறைகள் மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளவை என்று சொண்ட் நிறுவனத்தின் புதிய விவசாய முறையிலான பண்ணை ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது வட மாகாண விவசாய அமச்சர் திரு பொ .ஐங்கரநேசன் அவர்கள் தெரிவித்தார்.

