Category Archives: Latest Updates
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டம் – நல்லூர் பிரதேச செயலகம்
Column 2
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலர் திருமதி. அஜித்தா பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளள் எஸ்.சுசீகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள், கலந்துகொண்டனர்.
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட மட்ட அறிமுகக் கூட்டம்
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள், கலந்துகொண்டனர்.
சிறுவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Country Music foundation (Cmf) நிதி அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சொண்ட் நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் தலைமையில் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக Cmf நிறுவனத்தின் தலைவர் Mr.Feizal Samath அவர்களும், அவரது பாரியாரும், தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் திருமதி.கோ.சங்கீதா அவர்களும் கலந்து கொண்டனர்.
தாய்மார் கழகங்களுக்கான ஊக்குவிப்பு தொகை வழங்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுகாதாரமும் போசாக்கும் செயற்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பாக இயங்கும் 19 தாய்மார் கழகங்களை தெரிவு செய்ததுடன் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 1 தாய்மார்கழகத்தையும் தெரிவு செய்து கழகங்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதற்காகவும் தாய்மார் கழக அங்கத்தவர்களை ஊக்குவிப்பதற்காகவும் 20 தாய்மார்கழகங்களுக்கும் சிறிய பணத்தொகை வழங்கப்பட்டது.
செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த மிதிவெடி அபாயக்கல்வி, சிறுவர் பாதுகாப்பு, மற்றும் சுகாதாரமும் போசாக்கும் ஆகிய செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறுவர் வன்முறை சார் முறைப்பாட்டுப் பிரிவுடன் தொடர்புடைய பல்வேறுபட்ட திணைக்களங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு சம்பவ முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் வன்முறை சார் முறைப்பாட்டுப் பிரிவுடன் தொடர்புடைய பல்வேறுபட்ட திணைக்களங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு சம்பவ முகாமைத்துவம் தொடர்பான 2 நாள் பயிற்சிநெறி வழங்கப்பட்டது….
சிறுவர்கழகங்களுக்கான ஆளுமைவிருத்திக்கான தொடர் பயிற்சிகள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர்கழகங்களுக்கான ஆளுமைவிருத்திக்கான தொடர் பயிற்சி நெறிகள் பின்வரும் தலைப்புகளில் நடைபெற்றுவருகின்றன.
1. தலைமைத்துவம்
2. ஒழுக்க விழுமியங்கள்
3. வன்முறை அற்ற தொடர்பாடல்
4. எதிர்காலத் திட்டமிடலும் இலக்குகளை அடைதலும்
5. கனவுகளை உருவாக்குதல்
6. உணர்வுகளை வெளிப்படுத்தலும் நெறிப்படுத்தலும்