Category Archives: Latest Updates
கலந்துரையாடல்
பிரித்தானிய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாரீ அவர்கள் யாழ் மாவட்டத்திலுள்ள மதங்களின் பிரதிநிதிகளையும் SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசா அவர்களையும் சந்தித்து யாழ்மாவட்டத்தின் நிலைமை பற்றிக் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல்
சாவகச்சேரி டிறிபேக் கல்லுரியினை சிறந்த ஒரு மாதிரிப் பாடசாலையாக உருவாக்குவது தொடர்பாக SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசா சேர் அவர்கள் பாடசாலை அதிபர், ஆசியர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி SOND நிறுவனத்தினால் 27.03.2022 ம் திகதி நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறி நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் சமூக பிரதிநிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் சேர்த்து 31 பேர் கலந்து கொண்டனர்.
வன்முறையற்ற தொடர்பாடல் பயிற்சி
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் , சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் PACT திட்டத்தின் கீழ் நடைபெற்ற வன்முறையற்ற தொடர்பாடல் பயிற்சியில் சமூக மட்ட அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளும், இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர். இப் பயிற்சி திருமறைக்கலாமன்ற கலைக்கோட்ட மண்டபத்தில் நடைபெற்றதை படங்களில் காணலாம்….
அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பயிற்சி
அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பருத்தித்துறை நகர சபையின் தெரிவுசெய்யப்பட்ட ஆண் பிரதிநிதிகளுக்கும், சமூகத் தலைவர்கள், இளையோர், ஆர்வலர்களுக்கும் CDRI நிறுவன உதவியுடன் #SOND நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி இம் மாதம் 3,4 ஆகிய தினங்களில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
மக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பான கூட்டம்
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் #SOND நிறுவனத்தினால் நாவற்குழி கிராம மக்களுக்கான சமூக முரண்பாடுகளையும், சமூக விரோத செயற்பாடுகளில் மக்கள் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பான கூட்டம் அண்மையில் நடைபெற்றதை படங்களில் காணலாம்…
செயலமர்வு
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் , சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்திவரும் திட்டத்தின் கீழ் , இளையோர்களுக்கான வன்முறையற்ற தொடர்பாலும் , வெறுக்கத்தக்க பேச்சும் , மற்றும் தீவிரமான வன்முறைகளைத் தவிர்த்தலும் தொடர்பான செயலமர்வு. திங்கட் கிழமை யாழிலுள்ள சுபாஸ் ஹோட்டலில் நடைபெற்றது . இந்தப் பயிற்சி நெறியில் யாழ்ப்பாணம் , வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த 38 இளைஞர் , யுவதிகள் பங்குபற்றினர் . ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் , இளைஞர் , யுவதிகளுக்கு குறித்த இந்தப் பயிற்சி நெறியானது வழங்கப்பட்டது .
கீழ் புதிய ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி
தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான இரண்டாவது பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் சட்டம் சம்பந்தமான இரண்டாவது பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடாத்தப்பட்டது. நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.
தகவல் அறியும் உரிமை (RTI) சம்பந்தமான பயிற்சி
ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தின் பங்குதாரர்களுக்கான தகவல் அறியும் உரிமை (RTI) சம்பந்தமான பயிற்சி ஒன்று SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், நடாத்தப்பட்டது. நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தன் பேராசிரியர் மோகனதாஸ் அவர்களும் கலந்து கொண்டார்.