Category Archives: Latest Updates

சிறுமி 10 புத்தகத்தினை நூலக பாவனைக்காக வழங்கியுள்ளார்

13
SOND காந்தி கழகத்தின் உறுப்பினரான கா.தக்சிலா என்னும் சிறுமி 10 புத்தகத்தினை எமது அலுவலகத்தின் நூலக பாவனைக்காக வழங்கியுள்ளார்

டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் அனகி அடுப்புவழங்கபட்டது.

1
மட்டக்களப்பு SOND நிறுவனத்தினால் டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைக்காடு, மகிழடித்தீவு, பட்டப்பளை ஆகிய கிராமங்களிலுள்ள பயனாளிகளுக்கு 29.10.2014 திகதி பிரதேச செயலாளர் திருமதிசிவப்பிரியாவில்வரெட்ணம் தலைமையில் விறகுப்பாவனையை குறைப்பதன் மூலம் மரங்கள் வெட்டப்படும் அளவினை குறைக்கும் நோக்குடன் அனகி அடுப்புவழங்கபட்டது.

கூட்டுறவுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான ஆய்வுக் கலந்துரையாடலானது முதலமைச்சர் அலுவலகத்தில்

1
கூட்டுறவுத்துறை அபிவிருத்தி சம்பந்தமான ஆய்வுக் கலந்துரையாடலானது முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற போது SOND, சாந்தீகம் , YMCA நிறுவனங்கள் கலந்துகொண்டனர்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மிதிவெடி அபாயக்கல்வி விழிப்பணர்வு

1
SOND MRE பணியாளர்களினால் 28.10.2014 அன்றைய தினம் மாலை 04.00 – 05.00 மணியளவில் மாணிப்பாய் பிரதேசசபையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மிதிவெடி அபாயக்கல்வி விழிப்பணர்வு (Safety Briefing Program) வழங்கப்பட்டது. அதில் 85 ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர் 

பா டசாலை மட்டத்திலான மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு

2
SOND MRE பணியாளர்களினால் பா டசாலை மட்டத்திலான மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு 27.10.2014 அன்றைய தினம் காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணி வரை நடைபெற்றது. அதிபர் திரு.S.பரமேஸ்வரன் அவர்களின் அனுமதியுடன் தனங்கிளப்பு A.T.M பாடசாலையில் வழிப்புணர்வு வழங்கினார்கள்  

காலநிலைமாற்றச் செயலணி பேராசிரியர்களுடன் கலந்துரையாடல்

Untitled-1 copy
மட்டக்களப்பு மாவட்ட காலநிலைமாற்றச் செயலணி கிழக்கு பல்கலைக்கழக துறைசார்ந்த பேராசிரியர்களுடன் ‘மட்டக்களப்பு மாவட்டத்தின் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்ககைள் தொடர்பாகவும்’ காலநிலைமாற்றச் செயலணி கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது. 

யாழ்ப்பாணத்தில் இளையோர் திருவிழா

f 5
அம்பாறை, யாழ் மாவட்ட மூவினங்களைச் சேர்ந்த இளையோர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் இளையோர் திருவிழா ஒன்றை நடாத்தியது 

இயற்கை விவசாயப் பண்ணை

இப்படி ஒரு பண்ணை கடந்த வருடம் நீர்வேலியில் 4 பரப்புக் காணியில் SOND  நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.  இப்பண்ணையில் வாழை, வாழைக்கிடையே கிளிசரியா வேலிகள் ஊடுபயிராகப் போடப்பட்டது.  அத்தோடு பப்பாசி, அன்னாசி, மரக்கறிப்பயிர்வகைகள், அபூர்வமான மூலிகைகள் என்பன நாட்டப்பட்டன. மலைநாட்டில் விளையும் சலாது போன்ற மரக்கறி வகைகளும் நாட்டப்பட்டன. இப்பண்ணையில் மிகக்குறைந்தளவு நீர் பயன்படுத்தப்பட்டது. அயலில் இருக்கின்ற வாழைத்தோட்டங்களிற்கு பாய்ச்சுகின்ற நீரின் கால்ப்பங்கு நீரே இப்பண்ணையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பண்ணை மிகவும் செழிப்பாகக் காணப்பட்டது.  இப்பண்ணையைப் பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள், ஆர்வலர்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். இப்பண்ணை கடந்த வருடம் வடமாகாண விவசாய அமைச்சர் திரு.ஐங்கரநேசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லப்பைப் பண்ணை

தற்போது புதிய பண்ணையொன்று பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல்லப்பை என்ற இடத்தில் வல்லிபுரக் கோவிலுக்கு மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை சுமார் 10 ஏக்கர் நிலத்தைக் கொண்டது.

இதில் 6 ஏக்கர் நிலம் நெற்காணியும் 4 ஏக்கர் நிலம் மேட்டுக்காணியும் உள்ளது. இங்கு 20 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயமுறையைப்பற்றி விவசாயச்செய்கை ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

இளையோர் திருவிழா

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர் யுவதிகளினதும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளினதும் கலாசார திருவிழா 11.10.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நீராவியடி வீதியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

இவ்விழாவில் பல்வகை கலாச்சார நிகழ்ச்சிகளும் இளைஞர் யுவதிகளினது ஆக்கத்திறன் வெளிப்பாடும் இடம்பெறும். மொழிகள் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சமாதான சகவாழ்வு என்ற கருப்பொருளிலான சித்திரப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறும்.

காலநிலை மாற்ற செயற் குழுவினுடைய 5வது அமர்வு

111 copy

சொண்ட் அமைப்பினால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வரும் காலநிலை மாற்ற செயற் குழுவினுடைய 5வது அமர்வானது செப்டம்பர் 29 காலை 10 மணிக்கு இவ் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச. செந்தூராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதில் பல்வேறு அரசதிணைக்களங்களிலிருந்தும், அரசசார்பற்ற நிறுவனங்களிலிருந்தும் கமநல அமைப்புக்களிலிருந்தும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.