Category Archives: Latest Updates

காகிதாதிகள் வழங்கிவைப்பு

 

299994423_5078882668900825_8103299803617634244_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் சான்றுபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்,புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

 

 

பயிற்சிநெறி

 

299166333_5065246580264434_6698423925676314973_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் அரச அதிகாரிகளுக்கான செயற்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிநெறி நேற்றைய தினம் திருமறைக்கலாமன்ற கலைக் கோட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியானது சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளர்களாக Dr.Jeevasuthan (சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்), Dr.Raguram (பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சியில் சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம சேவையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

 

297776637_5034614913327601_6845897524132079696_n

எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்.
இக் கலந்துரையாடலானது அண்மையில் #SOND நிறுவன மண்டபத்தில் திரு.ச.செந்துராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பங்குபற்றுனர்களால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கருத்துக்களை தொகுத்து அரச அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.

 

 

அரசியல் மற்றும் சமூக பெண் தலைவர்களுக்கான பன்மைத்துவம் பற்றிய பயிற்சி

 

293630630_4987825638006529_8029852127331455019_n

அரசியல் மற்றும் சமூக பெண் தலைவர்களுக்கான பன்மைத்துவம் பற்றிய பயிற்சிப்பட்டறையானது தேசிய சமாதானப் பேரவையின் அனசரணையுடன் #NPC , சொண்ட் நிறுவனத்தினால் #SOND நேற்றைய தினம் #Greengrass hotel இல் நடைபெற்றதை படங்களில் காணலாம்…..

 

 

கலந்துரையாடல்

 

288798248_4926106967511730_4191536110064916075_n

சீன பட்டதாரியான Ruiyao அவர்கள் Honkhong web சார்பாக புலம்பெயர் தொழிலாளர் ஆய்வினை மேற்கொள்ள எமது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணியாளர் திரு.ச.செந்துராசா அவர்களை அண்மையில் சந்தித்தனர்.

 

 

திட்ட மீளாய்வு கூட்டம்

 

287627297_4909888655800228_4259147766985868759_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் இன்று 22.06.2022 திட்ட மீளாய்வு கூட்டம் யாழ் வலயக்கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாகாண கல்விப்பணிப்பாளர்- வட மாகாணம் மற்றும் மாகாண, வலய, கோட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

மாற்றத்திற்கான பாதை திட்டத்தை நெறிப்படுத்தியோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு

 

289683425_4907023222753438_3780732504691527625_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் சனிக்கிழமை 18.06.2022 பொது நூலக மண்டபத்தில் மாற்றத்திற்கான பாதை திட்டத்தை நெறிப்படுத்தியோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் திரு.சி.ஸ்ரீசற்குணராஜா அவர்களும் மற்றும் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் திரு.மோகனதாஸ் அவர்களும் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் திரு. R.குருபரன் அவர்களும் மற்றும் மேலதிக கல்விப்பணிப்பாளர் வடமாகாணம் திரு.J.குயின்ரஸ் அவர்களும் மற்றும் UNICEF நிறுவனத்தின் Child Survival and Development Officer திருமதி. S.ராதிகா அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தை நெறிப்படுத்தியோர் அனைவரையும் கெளரவிப்பதில் SOND நிறுவனமானது பெருமை கொள்கிறது.

 

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி

 

288016039_4893078540814573_8499258072636364184_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 16.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது. இப் பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.

 

 

சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி

 

286181574_4893072657481828_5902391777976285566_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வினைத்திறனான பாவனை தொடர்பான அரச அதிகாரிகளுக்கான பயிற்சி SOND நிறுவனத்தினால் 15.06.2022 ம் திகதி நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.பயிற்சியை நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பத்து வைத்தார். இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோரால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.

 

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி

 

285877980_4893064147482679_6260522162789991409_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சம்பந்தமான பயிற்சி SOND நிறுவனத்தால் சமூக பிரதிநிதிகளுக்கு நடாத்தப்பட்டது. நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முதல்வர் கலாநிதி S.ரகுராம் அவர்களால் நடாத்தப்பட்டது.