Category Archives: Latest Updates
தேசிய சமாதானப் பேரவையின் SCORE திட்டத்தின் DAP மீளாய்வு கூட்டம் – தெல்லிப்பளை
SOND நிறுவனத்தின் ஏற்பாட்டில் தேசிய சமாதானப் பேரவையின் SCORE திட்டத்தின் பிரதேச மட்ட ஆலோசனைக் குழு மீளாய்வுக் கூட்டமானது தெல்லிப்பளை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் SCORE திட்டத்தின் திட்ட உத்தியோகத்தரான திரு.G.வொட்கின்சன் அவர்கள் திட்ட செயற்பாடுகள் தொடர்பாக முன் மொழிந்தார்.
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நெறி
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நெறியானது அண்மையில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியில் பிரதேச செயலாளர் U.யசோதா அவர்களும், உதவித் திட்டமிடல் பணிப்பளர் N.சர்வேஸ்வரன் அவர்களும் மற்றும் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாவகச்சேரி பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான பயிற்சிநெறி – இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டம்
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நெறியானது அண்மையில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியில் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நல்லூர் பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான பயிற்சிநெறி – இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டம்
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக நல்லூர் பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியில் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜப்பான் நாட்டின் JICA நிறுவனத்தின் பிரதிநிதிகளின் யாழ் விஜயம்
JICA a Japan Government Organization visited north to explore the possibilities of implementing a project to support the Agriculture farmers to market their products for better price.
They met SOND staff team, Farmers organization, consult with AIs , DD, PD of Agriculture department and also visited the farms and agri products collection centers.
அண்மையில் ஜப்பான் நாட்டின் JICA நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகர் கசுகோ சிறாய், விவசாய பொறியியலாளர் கொகி மற்சுடா, ஒருங்கிணைப்பாளர் செனரத்.டி.சொய்சா ஆகியோர் இலங்கையின் வடபகுதியான யாழ் மண்ணிற்கு விஜயம் செய்திருந்தனர்.
அரச அதிகாரிகளுக்கான பயிற்சிநெறி – இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டம்
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தினூடாக அரச அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நெறியானது அண்மையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியில் கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசாங்க அதிகாரிகளுக்கான சட்ட ஆட்சி தொடர்பான ஒரு நாள் பயிற்சி – தெல்லிப்பளை பிரதேச செயலகம்
அண்மையில் அரசாங்க அதிகாரிகளுக்கான சட்ட ஆட்சி தொடர்பான ஒரு நாள் பயிற்சி தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இப்பயிற்சியில் வளவாளராக சட்டத்தரணி திரு.ஐங்கரன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் பிரதேச செயலக உதவி தட்டமிடல் பணிப்பாளர் திரு.வி.சிவகுமார் அவர்களும்,SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும், சொண்ட் நிறுவன பணியாளர்களும், NPC நிறுவனத்தின் SCORE திட்டத்தின் திட்ட உத்தியோகத்தரான திருமதி.வி.முகுந்தினி அவர்களும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சமூக ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி
அண்மையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சமூக ஒற்றுமை நல்லிணக்கம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி தெல்லிப்பளை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இப்பயிற்சியில் வளவாளராக திரு.வீரசிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு.சோ.சுகிர்தன் அவர்களும், SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களும், NPC நிறுவனத்தின் SCORE திட்டத்தின் திட்ட உத்தியோகத்தரான திருமதி.வி.முகுந்தினி அவர்களும் கலந்து கொண்டனர்.











