Category Archives: Latest Updates

விழிப்புணர்வுப் பதாதைகள் காட்சிப்படுத்தல்

 

8

 யுனிசெவ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் சார்ந்த அனர்த்த இடர் தணிப்பு செயற் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன அவற்றில் சிலவற்றை படங்களில் காணலாம9

 

உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

 

6 7

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 இனால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வானது 05.07.2021 திங்கட்கிழமை நடைபெற்றது. இவ் உலர் உணவுப் பொதிகள்  நல்லூர் கோப்பாய் தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவுகளிலுள்ள 70 வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

 

சுகாதாரப் திணைக்களகத்திற்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு

 

5

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் காலத்தின் தேவைகருதி சுகாதாரப் திணைக்களகத்திற்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்வானது 30.07.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இச் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் னுச.கேதீஸ்வரன் அவர்களிடம் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களினால் கையளிக்கப்பட்டன.

 

 

கைகழுவும் சாதனங்கள் கையளிப்பு

 

3

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனம் கைகழுவும் சாதனங்களை மாகாண சுகாதாரப் பணியாளர் Dr.A.கேதீஸ்வரன் அவர்களிடம் கையளித்ததை படத்தில் காணலாம்.

 

முதியோர் இல்லங்களுக்கான உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

.

1 2

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் முதியோர் இல்லங்களுக்கான உதவிப்பொருட்கள் வழங்கும் நிகழ்வானது கைதடி முதியோர் இல்லத்தில் 11.08.2021 புதன்கிழமை நடைபெற்றது. இம் முதியோர் இல்லத்தில் 204 முதியோர் தங்கியுள்ளனர். உற்றார் உறவினரைப் பிரிந்து மிகுந்த மனச்சுமையோடு வாழுகின்ற முதியோர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உதவிப்பொருட்கள்  வழங்கப்பட்டன

IOM நிறுவன வெளியீடான மனித விற்பனை பற்றிய கையேடு கையளிப்பு

 

canva-photo-editor (1)canva-photo-editor

IOM நிறுவன வெளியீடான மனித விற்பனை பற்றிய கையேடு யாழ் மாவட்ட பிரதி பொலீஸ்மா அதிபருக்கும் (DIG), யாழ் பிராந்திய பொலீஸ் அத்தியட்சகர் (SP) அவர்களுக்கும் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களால் வழங்கப்பட்டது.
மனித விற்பனையைத் தடுத்தல் செயற் திட்டத்தில் ஏனைய அரச திணைக்களங்களுடன் பொலீஸ் திணைக்களமும் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

 

தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார வலுவூட்டலும் நல்வாழ்வை உறுதி செய்தலும் செயற்திட்ட விளக்கக்கூட்டம்

 

176935395_3640870992702007_8146332079767625040_n

IOM    நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND  நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் தனிக்குடும்ப தலைமைகளின் பொருளாதார வலுவூட்டலும் நல்வாழ்வை உறுதி செய்தலும் செயற்திட்ட விளக்கக்கூட்டம் 5 கிராம சேவகர் பிரிவு ரீதியாக நடைபெற்றது. நடாத்தப்பட கூட்டங்களின் படங்களை கிழே காணலாம்.

 

 

மாற்றத்திற்கான பாதை ஆசிரியர்களுக்கான விழுப்புணர்வு செயலமர்வு

 175894480_3640885909367182_3841767780284208632_n
வளரிளம்பருவத்தினருக்கான மாற்றத்திற்க்கான பாதை திட்டத்தினூடாக யாழ் / கரவெட்டி ஸ்ரீ நாராத வித்தியாலய ஆசிரியர்களுக்கான அரைநாள் செயலமர்வு 20.04.2021 SOND நிறுவனத்தால் நடாத்தப்படத்தை இப் படங்களில் காணலாம்.

தேசிய சமாதான பேரவை

 

WhatsApp+Image+2021-06-22+at+21.59.14

தேசிய சமாதான பேரவையுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் கடந்த பங்குனி மாதம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தினசரி ஜனநாயகத்தை பேணுதல் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்வுகளை படத்தில்  காணலாம்.

 

மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

 

மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி அண்மையில் கோண்டாவில் இராமகிருஸ்ணா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்கள் இப் பயிற்சியை ஆரம்பித்து உரையாற்றினார், மேலும் திட்டத்தை அமுலாக்கும் சொண்ட் நிறுவனப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா உரையாற்றினார், மேலும் திட்ட வழிகாட்டல் நிதி உதவியளித்த யுனிசெவ் நிறுவன வடபிராந்திய தலமை அதிகாரி திரு.ந.சுதர்மன் அவர்கள் பயிற்சியை ஆரம்பித்து நடாத்தினார். தொடர்ந்து இரண்டு நாட்களும் மூன்று பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.